பிரதமராகும் தகுதி ராகுலுக்கு இல்லை- முலாயம் சிங்
பரெய்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாஜவாடி கட்சியின் பொதுக் கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசியது:

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது, அதனைக் கிழித்தெறிய வேண்டும் என்று ராகுல் காந்தி விமர்சித்ததன் மூலம், பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் பலவீனமடையச் செய்துவிட்டார். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் அவமானமடையச் செய்துவிட்டார்.
இதுபோன்ற விமர்சனம் எழுந்த உடனேயே தனது பதவியை மன்மோகன் சிங் ராஜிநாமா செய்திருக்க வேண்டும். பிரதமர் பதவியை அவமானப்படுத்தும் வகையில் பேசி எரிச்சலூட்டுகின்ற வகையில் நடந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டின் பிரதமர் ஆவதற்குத் தகுதி இல்லை.
நாட்டின் முன்னால் பெரும் சவால்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஆட்சி நடத்துபவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். நாட்டின் தலைமை கோழைத்தனமாக இருக்கிறது.
அண்டை நாடுகள் எதுவும் நமக்கு நட்பு நாடாக இல்லாதது துரதிருஷ்டவசமானது.
சமாஜ்வாடிதான் மாற்று
ஆளும் காங்கிரஸ் கட்சி மீதும், எதிர்க்கட்சியான பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்; சமாஜ்வாடி கட்சியை அவற்றுக்கு மாற்றாக கருதுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி பெரும்பான்மை பெறும். மேற்கு வங்கத்தில் பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ வெற்றி பெறப் போவதில்லை. அதே நிலைதான் ஒடிஸôவிலும், தமிழ்நாட்டிலும் உள்ளது.
ஆதலால், ஆட்சி அமைப்பவரை உத்தரப் பிரதேச மாநிலமே தீர்மானிக்கும். எனவே, எங்களை மக்களவைக்கு பலமுள்ளவர்களாக அனுப்பப் போகிறீர்களா அல்லது பலவீனமானவர்களாக அனுப்ப போகிறீர்களா என்பதை நீங்கள் (மக்கள்) முடிவு செய்யுங்கள்.
முசாஃபர் நகர் கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாங்கள் நடந்து கொண்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் முயற்சி செய்தோம் என்பதே உண்மை.
1990-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதை விமர்சிக்கின்றனர். மசூதி இடிக்கப்பட்டதை தடுக்க மட்டுமல்ல, நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கவும்தான் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநில காவல் துறையில் முஸ்லிம்கள் இடம்பெறுவதை எங்கள் கட்சி உறுதி செய்துள்ளது," என்றார்.
பிரதமர்களைத் தந்த மாநிலம்
முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "இங்கு பிரசாரம் செய்த நரேந்திர மோடி போன்ற தலைவர்கள் வகுப்பு வாதத்தை பரப்புகின்றனர்.
மத நல்லிணக்கத்தை குலைக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்துவோம். உத்தரப் பிரதேசம் பல பிரதமர்களை அளித்துள்ளது. ஆனால், குஜராத் மாநிலம் தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும் மட்டுமே அளித்துள்ளது. மோடியின் நோக்கம் லாப, நஷ்டம் மட்டுமே' என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications