மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வரும்.. மோடி மீது ராகுல் கடும் தாக்கு
தமிழக மக்கள் மீது மாற்று மொழியை பாஜக திணிக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
Recommended Video
டெல்லி: தமிழக மக்கள் மீது மாற்று மொழியை பாஜக திணிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்றதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. இன்று நிறைவு நாளின்போது ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சென்று இளைஞர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். அங்கிருந்து வரும் பதில் ஒன்றும் செய்யவில்லை என்பதுதான். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.
மறந்துவிட வேண்டாம்
இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ளபோதிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்குண்டு என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
காங்கிரஸ் நாட்டின் குரல்
பாஜக கட்சி ஒரு அமைப்பின் குரல், காங்கிரஸ் நாட்டின் குரல் ஆகும். மக்களின் சேவகனாக செயல்படுபகிறது காங்கிரஸ். அதனால் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் கேள்வி கேட்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.
செல்வந்தர்களின் காப்பாளர்
வங்கியில் மக்களின் பணத்தை கொள்ளையடிப்போரை மோடி அரசு பாதுகாக்கிறது. செல்வந்தர்களின் காப்பாளராக செயல்படுகிறது பாஜக.
யாராலும் தடுக்க முடியாது
முக்கிய பிரச்சினைகள் அனைத்திலும் பிரதமர் மௌனம் காக்கிறார். காங்கிரஸ் கட்சி உண்மையை பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. பழங்குயினரின் வனம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.
வாய்மைக்காக போராட்டம்
தமிழ் மக்கள் மீது மாற்று மொழியை திணிக்கின்றனர். ஊழலும் அதிகாரமும்தான் நாட்டை ஆண்டு வருகிறது. கவுரவர்களை போன்று பதவி ஆசையில் இருப்பவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். பாண்டவர்கள் போன்று வாய்மைக்காக போராடுபவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.
அமித்ஷா
கொலை வழக்கில் சிக்கியவரை பாஜக தலைவராக ஏற்று கொண்டுள்ளது. ரபேல் ஊழல், அமித்ஷாவின் மகன் ஊழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய்த் திறப்பதில்லை ஏன். மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மோடி யோகா செய்து கொண்டிருக்கிறார். 2019 தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையிலான தேர்தலாக இருக்கும் உயர்கல்வியை காங்கிரஸ் மேம்படுத்தும்வ ரும் 2019 ல் கொள்கை ரீதியிலான போர் நடக்கும். சுதந்திர காலத்தில் காங்கிரஸ் போராடியது போல் வரும் காலத்தில் போராடும். இந்தியாவை மாற்ற நாம் ஒன்றுபடுவோம் என்றார் ராகுல்காந்தி.