டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைதாகி விடுதலை !
டெல்லியில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லி: டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை டெல்லி போலீசார் மீண்டும் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார்.
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi at Parliament street police station, Delhi. pic.twitter.com/JApwnEoZUu
— ANI (@ANI_news) November 2, 2016
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் சடலத்தைக் காண மனோகர் லால் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி சென்றார். அப்போது அவருக்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி செல்ல முயன்ற ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்தனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி அவரை கைது செய்தனர். இதையடுத்து, ராகுல் காந்தியை கைது செய்த போலீசார் சில மணி நேரம் கழித்து விடுவித்தனர்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இதையடுத்து அவரை மீண்டும் டெல்லி போலீஸ் கைது செய்தது. கன்னவுட் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள மந்தீர் மர்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications