தேச விரோத கோஷங்களை ராகுல் ஆதரிக்கிறாரா, இல்லையா?.. அமீத் ஷா கேள்வி
லக்னோ: தேச விரோத கோஷங்களுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவிக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
இதன் மூலம், ஜே.என்.யூ விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிரான காய் நகர்த்தலை அமித் ஷா ஆரம்பித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பஹ்ரைச் என்ற பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித்ஷா இதுகுறித்து பேசியதாவது: "அப்சல் குரு.. உங்களின் கொலையாளிகள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள்.., இந்தியா பல பகுதிகளாக உடையும்.." என்றெல்லாம் கோஷமிடுவது தேசத்துரோகமா இல்லையா, என்பதை காங்கிரசிடமும் அதன் தொண்டர்களிடமும் நான் கேட்க விரும்புகிறேன்.
இந்தியாவுக்கு எதிரான கோஷங்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு அளிக்கிறாரா என்பதை இந்த நாட்டுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த கோஷங்களை அவர் கண்டிப்பதாக இருந்தால் அதை அவர் செய்ய வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக, தேச நலனை பலி கொடுத்து, ஓடி ஒளியக்கூடாது.
தேசத்துக்கு எதிராக கோஷமிடுவது தேசத்துரோகமா அல்லது கருத்து சுதந்திரமா என்பதை நாடாளுமன்றத்தில் அமர்ந்து, அரசுக்கு எதிராக கருத்து கூறிவரும் கட்சிகள் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications