கச்சநத்தம் படுகொலை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
கச்சநத்தத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கச்சநத்தத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் தலித்துக்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது பிரச்சனை ஆகவே இரவோடு இரவாக வீடு புகுந்து தலித் இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்கி இருக்கிறார்கள்.
இந்த மோசமான தாக்குதலில் மூன்று தலித் இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த படுகொலை காரணமாக கச்சநத்தம் பகுதியில் மக்கள் கடந்த ஒரு வாரமாக போராடி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
கச்சநத்தத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும் ராகுல் இரங்கல் தெரிவித்துள்ளார்.