தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்க தயார்: ராகுல் காந்தி
டெல்லி: வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்கத் தயார் என்று பிரதமராவது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில்,
நான் காங்கிரஸ் கட்சியின் வீரன். எனக்கு என்ன உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதை மதித்து நடப்பேன். பிரச்சாரத்தின்போது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் பழக்கம் காங்கிரஸுக்கு இல்லை. இருப்பினும் கட்சியின் முடிவை மதிப்பேன். நாட்டின் நலனுக்கு ஒரு மனிதர் அரசு நல்லதல்ல. தனி மனிதரின் விருப்பத்திற்கேற்ப அரசு செயல்படக் கூடாது. காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்கத் தயார் என்றார்.