டெல்லியில் அனைத்து மாநில காங். தலைவர்களுடன் ஆலோசனையை துவங்கிய ராகுல்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி நடந்து வருகிறது.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டுள்ளார். தமிழக காங்கிரஸின் மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாரணி டெல்லி சென்று ராகுலை சந்தித்தது தன் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளங்கோவன் இன்று ராகுல் காந்தியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi: PCC Chiefs meet Rahul Gandhi at AICC pic.twitter.com/8mW1fNRpV9
— ANI (@ANI_news) February 5, 2016
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மோடி அரசு தாங்கள் கொண்டு வந்தது போன்று தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்கிக் கூற செயல் திட்டம் வகுப்பது குறித்து மாநில தலைவர்களுடன் ராகுல் ஆலோசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications