'பிரேக்'கை விட்டு விட்டு 'கிளட்ச்'சைப் பிடிச்சு 'டாப் கியருக்கு' மாறிய ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீண்ட இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாம் அமர்வு துவங்கிய அன்று 2 வார விடுப்பில் சென்றார். ஆனால் அவர் அறிவித்தபடி இரண்டு வாரத்தில் திரும்பி வரவில்லை. மாறாக விடுப்பை நீட்டித்து 57 நாட்கள் கழித்து தான் வந்தார்.

Rahul Gandhi returns to parliament after a long break

வந்த வேகத்தில் நான்கு மாநில விவசாயிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு நிலம் கையப்படுத்தும் மசோதாவை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நேற்று நடத்திய பேரணியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. நீண்ட விடுப்பில் சென்ற ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

லோக்சபாவில் காங்கிரஸார் அமளியில் ஈடுபட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இருக்கையில் இருந்து எழுந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றார். சோனியா சுஷ்மாவிடம் நலம் விசாரித்தார். இதை பார்த்த ராகுலும் வந்து சோனியா அருகே நின்று சுஷ்மாவிடம் நலம் விசாரித்தார்.

என்ன தான் அரசியல் ரீதியாக பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சோனியாவும், சுஷ்மாவும் பேசிக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+