இன்னும் 20 நாளுக்கு ராகுல் அரசியலுக்கு வரமாட்டாராமே...
டெல்லி: உலகத்திலேயே அரசியலுக்கு லீவ் போட்டுவிட்டு ஓய்வெடுக்கப் போன முதல் தலைவரான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்னும் 20 நாட்களுக்கு லீவை நீட்டித்துள்ளாராம். நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ள பேரணியில் ராகுல் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் அரசியல் தலைமைத்துவ பயிற்சிக்காக எனக் கூறி லீவில் சென்றுவிட்டார் ராகுல் காந்தி. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவி கிடைக்காத காரணத்தால் கோபித்துக் கொண்டு ராகுல் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் ராகுல் ஒரு வாரத்தில் திரும்பிவிடுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ராகுல் அரசியலுக்கு வரவே இல்லை.
அண்மையில் கூட நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக டெல்லி குலுங்க காங்கிரஸ் பேரணி நடத்தியது. இப்பேரணியில் போலீசார் தடியடி நடத்தியும் இருந்தனர். இப்பேரணிக்கு ராகுல் தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் கடைசிவரை ராகுல் வரவே இல்லை. காங்கிரசாரும் ராகுல் இதோ வந்துவிடுவார் என்று பல முறை கூறி சலித்துப் போய்விட்டனர்.
இந்நிலையில் தற்போது ஏப்ரல் 19-ந் தேதியன்று ராகுல் காந்தி மீண்டும் அரசியலுக்கு வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.
இப்போதும் கூட ஏப்ரல் 19-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதால் ராகுல் வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.
வருவார்.. ஆனா வரமாட்டாரா?
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications