ஆந்திராவை ஆண்ட பாவத்தை கோதாவரியில் புனித நீராடி போக்குங்க ராகுல்.. சொல்வது டி.ஆர்.எஸ். எம்.பி. கவிதா
கம்மம்: ஆந்திராவை 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த பாவத்தை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோதாவரியில் புனித நீராடி போக்கிக் கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் டி.ஆர்.எஸ். கட்சியின் எம்.பியுமான கவிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக எம்.பி. கவிதா கூறியுள்ளதாவது:
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இப்போது ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் பாதயாத்திரையை ராகுல் காந்தி நடத்துவதால் மட்டுமே விவசாயிகளுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை வந்துவிடாது.
நீங்கள் செய்த பாவத்தை எப்படி போக்குவது? தற்போது நடைபெறும் மகா புஷ்கரலுவையொட்டி கோதாவரி ஆற்றில் ராகுல் காந்தி புனித நீராடி காங்கிரஸின் பாவத்தைப் போக்க் வேண்டும்.
இவ்வாறு கவிதா கூறினார்.