For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவை ஆண்ட பாவத்தை கோதாவரியில் புனித நீராடி போக்குங்க ராகுல்.. சொல்வது டி.ஆர்.எஸ். எம்.பி. கவிதா

By Mathi
Google Oneindia Tamil News

கம்மம்: ஆந்திராவை 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த பாவத்தை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோதாவரியில் புனித நீராடி போக்கிக் கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் டி.ஆர்.எஸ். கட்சியின் எம்.பியுமான கவிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக எம்.பி. கவிதா கூறியுள்ளதாவது:

ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இப்போது ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் பாதயாத்திரையை ராகுல் காந்தி நடத்துவதால் மட்டுமே விவசாயிகளுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை வந்துவிடாது.

Rahul must take holy dip: TRS MP Kavita

நீங்கள் செய்த பாவத்தை எப்படி போக்குவது? தற்போது நடைபெறும் மகா புஷ்கரலுவையொட்டி கோதாவரி ஆற்றில் ராகுல் காந்தி புனித நீராடி காங்கிரஸின் பாவத்தைப் போக்க் வேண்டும்.

இவ்வாறு கவிதா கூறினார்.

English summary
Telangana Rashtra Samiti MP Kavita said on Friday that Congress vice-president Rahul Gandhi should take a holy dip in the Godavari during the Maha Pushkaralu to clear the Congress' sins during its 10-year rule in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X