விபச்சார வழக்கில் சிக்கிய ரஷ்மி நாயரும், ராகுலும் சென்னையில் படித்த என்ஜினியர்களாம்!
திருவனந்தபுரம்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ராகுல் பசுபாலனும், ரஷ்மி நாயரும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லப் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் உள்பட 15 பேர் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரஷ்மி, ராகுல் பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை
ரஷ்மி நாயரும், ராகுல் பசுபாலனும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கையில் முதன்முதலாக சந்தித்துள்ளனர்.

என்ஜினியர்கள்
படிக்கையில் காதலில் விழுந்த அவர்கள் ஓராண்டு லிவ் இன் முறைப்படி வாழ்ந்துள்ளனர். அதன் பிறகே அவர்கள் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு தற்போது 6 வயதில் மகன் உள்ளார்.

மாடலிங்
படித்து முடித்த பிறகு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியர்களாக வேலை செய்துள்ளனர் ராகுலும், ரஷ்மியும். அப்படி இருக்கையில் தான் ரஷ்மி மாடலிங் செய்துள்ளார்.

ஏன்?
நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்த அவர்கள் எதற்காக பெண்கள், சிறுமிகளை ஏமாற்றி விபச்சாரம் செய்து வந்தனர் என்ற கேள்வி எழுந்தது.

கடன்
ராகுல், ரஷ்மி ஆகியோர் சினிமா படம் ஒன்று எடுக்க செய்த முயற்சி தோல்வி அடைந்ததாம். சினிமா படத்தால் கடன் தொல்லையில் சிக்கிய அவர்கள் எளிதில் பணம் சம்பாதிக்க விபச்சார தொழிலை தேர்வு செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications