ஃபேஸ்புக் மூலம் அழகிய பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்த ராகுல், ரஷ்மி: திடுக் தகவல்கள்
திருவனந்தபுரம்: ஆன்லைனில் மூலம் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்த ராகுல் பசுபாலன் ஃபேஸ்புக் மூலம் தான் பெண்கள், சிறுமிகளை கவர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு கேரளாவில் கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்திய ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடலுமான ரஷ்மி நாயர், பிரபல ரவுடி அக்பர் உள்பட 15 பேர் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ராகுல்
ராகுல் பசுபாலன் ஃபேஸ்புக்கில் பிற மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அவரது ரெக்வெஸ்ட்டை ஒப்புக் கொள்ளும் பெண்களை அவர் எப்படி தனது வலையில் சிக்க வைத்தார் என்பது தெரிய வந்துள்ளது.
மாடல்
என் மனைவி ரஷ்மி நாயர் பெரிய மாடல். நீங்களும் பார்க்க மாடல் போன்று உள்ளீர்கள். கேரளாவுக்கு வந்தால் உங்களை பெரிய மாடலாக்கி பணம் கொட்ட வைப்பேன் என்று அவர் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
பெங்களூர் பெண்
பெங்களூரில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த லினீஷ் மேத்யூவை ராகுல் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான பெண்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கேரளா
மாடலாகும் ஆசையில் கேரளா வந்த பெண்கள், சிறுமிகளை ராகுலும், ரஷ்மியும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிவிட்டுள்ளனர். அழகான பெண்களை பெரிய பணக்காரர்களின் இச்சைக்கு விருந்தாக்கியுள்ளனர்.
பெங்களூர்
ராகுலின் ஆசை வார்த்தையை கேட்டு மயங்கி தங்கள் வாழ்க்கையை பாழாக்கிய பெண்களில் பலர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.