சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்சித் சின்கா விரைவில் டிஸ்மிஸ்?
டெல்லி: ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களை தனது வீட்டில் சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதால் சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்சித் சின்காவை நீக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா, ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஆகிய வழக்குகளில் தொடர்புடைய சிலரை தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை பொதுவாக சி.பி.ஐ. இயக்குநர் தனது அலுவலகத்தில் அதே வழக்கை விசாரித்து வரும் மற்ற அதிகாரிகளின் முன்னிலையில் சந்தித்து பேசவேண்டும் என்பது சட்ட விதியாகும்.

பூஷன் புகார்
இந்த விதிமுறையை மீறி ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களை அவர் சந்தித்து பேசியதாக மூத்த வழக்கறிஞரும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த பொது நல வழக்கில் ஆஜராகி வருபவருமான பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார்.

சர்ச்சை நபர்களுடன் சந்திப்பு
ரஞ்சித் சின்காவின் வீட்டின் உள்ள பதிவேடுகளின் மூலம் இந்த உண்மை தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் ஹவாலா மோசடி வழக்கில் தொடர்புடைய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியையும் அவர் தனது வீட்டில் சந்தித்து பேசியதாக புகார் கூறப்பட்டது.

பதவி நீக்க கோரி மோடிக்கு கடிதம்
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த்பூஷன் பிரமாண பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தார். மேலும், ரஞ்சித் சின்காவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதினார்.

பூஷன் மீது சிபிஐ வழக்கு
பிரசாந்த்பூஷண், உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து உள்ளதாகவும், எனவே அவர் மீது வழக்கு தொடர அனுமதிக்கவேண்டும் எனவும் சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது.

சின்கா நீக்கம்?
இந்த நிலையில் பிரசாந்த்பூஷன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே ரஞ்சித் சின்கா சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

ராகுல் ஆதரவாளர்
கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஞ்சின் சின்காவை சிபிஐ இயக்குநராக நியமித்ததில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications