விரைவில் வங்கிகளில் ரயில் டிக்கெட் வாங்கலாம்
டெல்லி: பொது வகுப்புக்கான டிக்கெட்டுகளை வங்கிகள் மூலம் வினியோகிக்க உள்ளது இந்திய ரயில்வே துறை.
ரயில்களில் பொது வகுப்புக்கான டிக்கெட்டுகளை வங்கிகள் மூலம் வினியோகிக்க உள்ளது ரயில்வே துறை. இந்த திட்டம் குறித்த வேலையை ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறுதி கட்டத்தை அடைந்து அமலுக்கு வரும். இந்த திட்டம் மூலம் இரண்டு வகையான செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளது ரயில்வே துறை.
வங்கி வளாகங்களில் ரயில்வே டிக்கெட் கிடைக்கும் தானியங்கி எந்திரத்தை வைக்கவும், ஏடிஎம் எந்திரங்களில் சில மாற்றங்கள் செய்து அதில் ரயில் டிக்கெட் கிடைக்கச் செய்யவும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த திட்டம் மூலம் ரயில் டிக்கெட்டுகள் எளிதில் கிடைக்கும். ஜம்ஷெட்பூரில் உள்ள மேங்கோ தபால் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ரயில்களின் பொது வகுப்பு டிக்கெட் வழங்கப்படுகிறது.
டாடா நகர் ரயில் நிலையத்தில் இரண்டு ஏடிவிஎம்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள், காசு மற்றும் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அவற்றில் இருந்து ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்.