பெங்களூருவில் சூறாவளி காற்றுடன் மழை
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: இன்று மதியம் முதல் பெங்களூருவில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
மதியம்வரை பெங்களூருவில் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மேல் பயங்கர காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. புயல் போன்ற வேகத்தில் காற்றடித்ததால் நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 செ.மீ அளவுக்கு மழை கொட்டியது.

இதனால் மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்பட்டனர். இதேபோல தமிழகத்தின் ஒசூரிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications