For Daily Alerts
Just In
பெங்களூருவில் சூறாவளி காற்றுடன் மழை
பெங்களூரு: இன்று மதியம் முதல் பெங்களூருவில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
மதியம்வரை பெங்களூருவில் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மேல் பயங்கர காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. புயல் போன்ற வேகத்தில் காற்றடித்ததால் நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 செ.மீ அளவுக்கு மழை கொட்டியது.
இதனால் மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்பட்டனர். இதேபோல தமிழகத்தின் ஒசூரிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது.
Comments
English summary
Rain lashes Bangalore in the evening on Wednesday. Rain lashes Bangalore in the evening on Wednesday.
Story first published: Wednesday, April 29, 2015, 17:37 [IST]