கைக்குழந்தையுடன் விடிய, விடிய ரோந்துப் பணி பார்க்கும் டி.எஸ்.பி அர்ச்சனா ஜா..
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தலைநகர் ராய்ப்பூரில் பச்சிளம் குழந்தையின் தாயான டி.எஸ்.பி ஒருவர் அக்குழந்தையுடன் இரவு நேர காவல் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராய்ப்பூரின் குற்றப்பிரிவு டி.எஸ்.பியான அர்ச்சனா ஜாதான் அந்த இரும்புப் பெண்மணி. குழந்தையுடன் அதிகாலை 5 மணி வரையில் ரோந்துப் பணிகளை கவனித்து வருகின்றார் அர்ச்சனா. வேலையையும், குடும்பத்தையும் அவர் ஒருங்கே கவனிக்கின்றார் என்று தற்போது அனைவராலும் புகழப்பட்டு வருகின்றார்.

இவர் ரோந்துப் பணியில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதுமட்டுமல்ல ராய்ப்பூரின் பிலாஸ்பூர் கிராமத்திற்கு அம்மாநில முதல்வர் வந்தபோது கர்ப்பமாக இருந்த அர்ச்சனா தொடர்ச்சியாக 7 நாட்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுத் துறைகளில் பெண்களுக்கு 2 வருட பிரசவ கால விடுப்பு இருந்தாலும், மாநில அரசுத் துறைகளில் 6 மாதங்கள் மட்டுமே பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் அர்ச்சனா ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளதாலும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டிலும் யாரும் இல்லாததாலும் காரணத்தினால் கூடவே எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தன்னுடைய வேலையை சரிவர செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications