2ஜி ஊழல் வழக்கு: ஆ.ராசா, கனிமொழி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 9 பேர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நாளை (மே 28) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடைய கலைஞர் டிவிக்கு முறைகேடாக ரூ. 200 கோடி பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக மத்திய அமலாக்கத் துறை குற்றச்சாட்டு எழுப்பியது.
இதையடுத்து தயாளு அம்மாள், கனிமொழி, ஆ. ராசா, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கே. கோயங்கா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம், குசேகான் ரியாலிட்டி, சினியுக் மீடியா எண்டர்டெயின்மெண்ட், கலைஞர் டிவி, டிபி ரியாலிட்டி உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு எதிராகவும் மத்திய அமலாக்கத் துறை, சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ராசா, கனி ஜாமீன் மனு
இதையடுத்து மே 26ம்தேதி திங்களன்று ஆ. ராசா, கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர். அப்போது, ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி உள்பட 10 பேர் மனு தாக்கல் செய்தனர்.

தயாளு அம்மாள்
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அம்ரீந்தர் சரண், "வயோதிகம், உடல் நலக் குறைவு, மனநிலை சரியில்லாத காரணங்களால் தயாளு அம்மாள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு (குற்றப்பிரிவு சிஆர்பிசி 205-ன் கீழ்) அளிக்க வேண்டும்' என்று தெரிவிக்கும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

மே 28ல் விசாரணை
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, "இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் புதன்கிழமை (மே 28) தொடங்கும். அதன்பின் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும்' என்று உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிக்கை நகல்
மேலும், மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்களை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications