மோடி நான் சொல்வதை எல்லாம் கேட்கிறார், எனக்கு எதற்கு அமைச்சர் பதவி?: சு.சாமி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: நான் என்ன கூறினாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

ஒரிஸா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ஞாயிற்றுக்கிழமை வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், மோடி அமைச்சரவையில் இல்லாதது உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று கேட்டனர்.

Raja(Modi) listens to me: Swamy

அதற்கு அவர் கூறுகையில்,

என்னை பார்த்தால் கவலையாகவா தெரிகிறது? நான் பயணம் செய்து கொண்டே இருக்கிறேன். நேற்று கொல்கத்தாவுக்கு சென்றேன், இன்று இங்கு வந்துள்ளேன். பதவிக்கு ஏங்குவது எல்லாம் ஆங்கிலேயர்களின் மனநிலையாகும். இந்திய பிராமணர்களும், கற்றறிந்தவர்களும் எந்த பதவியிலும் இருந்தது இல்லை. இருப்பினும் ராஜாக்கள் அவர்கள் சொல்வதை கேட்பார்கள்.

நான் எந்த விஷயம் பற்றி ஏதாவது கூறினாலும் ராஜா(மோடி) கேட்கிறார். என் நிலைமை அவ்வாறு உள்ளது. நான் அமைச்சராக ஆகியிருந்தால் ஒரு துறைக்குள் அடங்கியிருப்பேன். ஆனால் தற்போது நான் அனைத்து அமைச்சகங்கள் பற்றியும் பேச முடியும். எனக்காக வருத்தப்படாதீர்கள். ஒரிஸா விழாவில் கலந்து கொள்ளாமல் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு அழைத்தார்கள். இது நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி அதனால் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டேன்.

அதனால் தான் பதவியேற்பு விழாவுக்கு செல்லாமல் இங்கு வந்துள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+