ராஜஸ்தான் மாநிலத்தில் கோர விபத்து.. லாரி மீது மோதிய வேன்.. சுற்றுலா சென்ற 18 பேர் பலி!
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பாரத் மாலா விரைவுச் சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் ஒன்று மோதியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, பாரத் மலா தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிகானரில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பேருந்து, பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக வந்த டெம்போ டிராவலர் வேன், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அந்த நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு வந்த போலீசார், மீட்புக் குழுவினர் வேனுக்குள் சிக்கியிருந்த உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கோர விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் நொறுங்கிய வாகனத்தின் சீட்களுக்கு இடையே சிக்கி இருந்ததால் மீட்புப் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷ்னர் ஓம் பிரகாஷ் பாஸ்வான் கூறுகையில், "சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். காயமடைந்தவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது." என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications