ராஜஸ்தானில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது காங்கிரஸ்! ஆட்சியை பறி கொடுத்தது பாஜக
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக நடுவே கடும் போட்டி நிலவிய நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்க கடும் போராட்டம் நடத்தி வருகிறது காங்கிரஸ்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆல்வார் மாவட்டத்திலுள்ள ராம்கார் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

இம்மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 தொகுதிகளில் வெல்வது அவசியம். பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான, பாஜக ஆட்சியால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது, காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று கூறின.
இந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணப்பட துவங்கியது முதலே, ராஜஸ்தானில், காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் சம அளவில் முன்னிலை பெற்றன. ஆனால், சிறிது நேரம் கழித்து காங்கிரஸ் முன்னிலை பெறத் தொடங்கியது.
இதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணத்தொடங்கப்பட்டதும், காங்கிரஸ் கட்சி பெரும் முன்னிலை நோக்கி சென்றது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நம்பப்பட்டது. ஆனால் காலை 11.30 மணியளவிலான நிலவரப்படி, 100 தொகுதிகளில் காங்கிரசும், 74 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை பெற்றிருந்தன. பாஜக 50க்கும் குறைவான இடங்களில் வெல்லும் என்று பல எக்சிட் போல் முடிவுகள் கூறிய நிலையில், அக்கட்சி அதைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், இழுபறி நிலை நீடித்தது.
பிற்பகல் 2 மணியளவில் காங்கிரஸ் 104 தொகுதிகளிலும், பாஜக 67 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. இரவு 8 மணிக்கு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி, காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 28 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆக மொத்தம் 99 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது.
பாஜக 60 தொகுதிகளில் வெற்றி பெற்று, 13 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. 73 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்று 1 தொகுதியில் முன்னிலையில் இருந்தது. எனவே, காங்கிரசுடன் இணைந்து பகுஜன் சமாஜ் ஆட்சியை பிடிக்கப்போகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications