பலாத்கார வழக்கு: ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் கைது!
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் பாபுலால் நாகரை சிபிஐ நேற்று கைது செய்தது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த செப்டம்பர் 11-ந் தேதி 35 வயது பெண் ஒருவரை தனது பங்களாவுக்கு வரச்செய்து பாபுலால் நாகர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பாபுலால் நாகர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இக் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவியை விட்டு விலகிய அவரை காங்கிரஸ் மேலிடம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. மேலும் பாபுலால் நாகர் வீட்டில் சோதனை நடத்தி அவரது படுக்கை அறையும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாபுலால் நாகரை நேற்று சிபிஐ கைது செய்துள்ளது. பலாத்கார புகார் தெரிவிக்கப்பட்டு 40 நாட்கள் கழித்து பாபுலால் நாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications