பலாத்கார வழக்கு.. ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் ராஜினாமா -படுக்கை அறைக்கு சீல்!
ஜெய்ப்பூர்: பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில உணவுத் துறை அமைச்சர் பாபுலால் நாகர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தவர் பாபுலால் நாகர். இவர் மீது கடந்த வாரம் 35 வயது பெண் பலாத்கார புகார் தெரிவித்திருந்தார்.

போலீசார் மறுப்பு
ஆனால் அந்த பெண்ணின் புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

கோர்ட் படியேறிய பெண்
இதைத் தொடர்ந்து கடந்த 13ந் தேதி, மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் பிரதீப் மோடி முன் ஆஜராகி அந்தப் பெண் வாக்கு மூலம் அளித்தார்.

வழக்கு பதிவுக்கு உத்தரவு
பின்னர் மாஜிஸ்திரேட் உத்தரவின் படி அமைச்சர் பாபுலால் நாகர் மீது நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

படுக்கை அறைக்கு சீல்
அப்போது தம்மை பாபுலால் நாகர் பலாத்காரம் செய்த படுக்கை அறையையும் அப்பெண் சுட்டிக் காட்டினார். அந்த படுக்கை அறைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

ராஜினாமா அறிவிப்பு
இந்த நிலையில் தார்மீக அடிப்படையில் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக பாபுலால் நாகர் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தம் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications