For Daily Alerts
Just In
டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைகிறார் ராஜ்தீப் சர்தேசாய் மனைவி சகாரிகா கோஷ்!
டெல்லி: சி.என்.என்.என். ஐ.பி.என்.இல் இருந்து வெளியேறிய ராஜ்தீப் சர்தேசாய் இந்தியா டுடே குழுமத்தில் இணைந்துள்ள நிலையில் அவரது மனைவி சகாரிகா கோஷ் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைய இருக்கிறார்.
நெட்வொர்க் 18 குழுமத்தை கடந்த ஜூலை மாதம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ரூ4 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இதைத் தொடர்ந்து அக்குழுமத்துக்கு சொந்தமான சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய், அவரது மனைவி சகாரிகா கோஷ் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர்.
ராஜ்தீப் சர்தேசாய் நேற்று இந்தியா டுடே குழுமத்தில் கன்சல்டிங் எடிட்டராக இணைந்தார். இந்த நிலையில் சகாரிகா கோஷ் டைம்ப்ஸ் ஆப் இந்தியாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. சகாரிகாவுக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா கன்சல்டிங் எடிட்டர் பதவி வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.
Comments
English summary
Rajdeep Sardesai, the former editor-in-chief at IBN18 Network, was appointed consulting editor of the India Today Group on Thursday, while his journalsit wife Sagarika Ghose, who recently quit as deputy editor of CNN-IBN is all set to return to The Times of India as consulting editor, reports said.
Story first published: Friday, September 12, 2014, 14:14 [IST]