கேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் ரஜினிகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக ரஜினிகாந்த் வழங்கினார்.

கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்த மழையால் 14 மாவட்டங்களில் கடுமையான வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.

Rajinikanth offers Rs 15 lakhs to Kerala

இதனால் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் சாலைகளும் சேதமடைந்துள்ளதால் ஆபத்தில் உள்ளவர்களை படகு மூலம் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளம் பழைய நிலைக்கு திரும்ப உதவி செய்யுங்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். அதன் படி ஆந்திரம், தமிழகம், தெலுங்கானா, பீகார், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

மேலும் சினிமா பிரபலங்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சத்தை வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+