1987-ல் ராஜிவ் ஆட்சியை அகற்றி ராணுவப் புரட்சிக்கு சதி... முன்னாள் ராணுவ அதிகாரி 'திடுக்' தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 1987ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி தலைமையிலான ஆட்சியை கைப்பற்றி ராணுவப் புரட்சிக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் பி.என். ஹூண் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராணுவத்தின் மேற்கு பிராந்திய ராணுவ தளபதியாக இருந்தவர் லெப். ஜெனரல் பி.என். ஹூண். அவர் "The Untold Truth" என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் ராஜிவ்காந்திக்கும் முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்குக்குமான மோதல்கள் பற்றிய பல தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் சில .........
- 1987ஆம் ஆண்டு 3 துணை கமாண்டோ பட்டாலியன்கள் டெல்லிக்கு விரைந்து செல்லுமாறும் ராஜிவ் காந்தியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
- ராஜிவ்காந்தி மீது அதிருப்தியில் இருந்த சில அரசியல் தலைவர்களும் இந்த சதித் திட்டம் குறித்து தெரிந்து மகிழ்ச்சியடைந்தனர்.
- முப்படைகளின் தலைவரான ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்குக்கும் இது தெரிந்திருந்தது. ஆனால் அவர் இந்த சதியை நிறைவேற்ற முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த அதிகாரமும் ராணுவம் வசம் சென்றுவிட்டால் மோசமான நிலைமை ஏற்படும் என கருதினார்.
- ராஜிவ்காந்தியைப் பொறுத்தவரையில் ஒருபோதும் ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்கை முழுமையாக நம்பியதே இல்லை
- இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் படுகொலை செய்ததைத் தொடர்ந்து ஜெயில்சிங்கை சந்தேகத்துடனேயே ராஜிவ் காந்தி பார்த்துவந்தார்.
- பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் இயக்கத் தலைவர்களுடன் ஜெயில்சிங் தொடர்பில் இருப்பதாக ராஜிவ் நம்பினார். அதனால் ஜெயில்சிங் தொலைபேசிகளை டேப் செய்ய உத்தரவும் பிறப்பித்தார்.
- ஜனாதிபதி ஜெயில்சிங் ராஷ்டிரபதி பவனுக்குள்ளும் வெளியிலும் பேசிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. இதை ஜெயில்சிங்கும் அறிந்துவைத்திருந்தார்.
- ராஜிவ்காந்தியை ஊழல்வாதியாகத்தான் ஜெயில்சிங் கருதினார். அவரே ஊழல்களுக்கு பொறுப்பு எனவும் பேசினார்.
- இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என ஜெயில்சிங் விரும்பினார். ஆனால் ராஜிவ்காந்தி இதில் முனைப்பு காட்டததால் அவர் அதிருப்தி அடைந்திருந்தார்.
More From
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications