இந்திய உளவுத்துறைக்கு ராஜீவ் ஜெயின், ரா அமைப்புக்கு அனில் தஸ்மானா நியமனம்
இந்திய உளவுத்துறைக்கு புதிய தலைவராக ராஜீவ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா அமைப்புக்கு புதிய தலைவராக அனில் தஸ்மானா நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான 'இன்டலிஜென்ஸ் பீரோ'(ஐபி) எனப்படும் புலனாய்வு பிரிவின் தலைவராக ராஜீவ் ஜெயினை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
ரிசர்ச் அண்ட் அனாலிசஸ் விங் எனப்படும் 'ரா' அமைப்பு தலைவராக அனில் தஸ்மானா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் ஜெயின் 1980ம் ஆண்டு ஜார்கண்ட் மாநில பிரிவில் இருந்து தேர்வானவர். ராஜீவ் ஜெயின் ஏற்கனவே மாநில உளவுப்பிரிவு தலைவராக டெல்லி, அகமதாபாத் மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். அனில் தஸ்மானா 1980ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில பிரிவில் இருந்து தேர்வானவர்.












Click it and Unblock the Notifications