ஈழத் தமிழர் பிரச்சனையை ராஜிவ் சரியாக கையாளவில்லை: முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்!
டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சரியாக கையாளவில்லை என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தமது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு "போதாத புத்தக சோதனை" காலம் இது.. மன்மோகன்சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசர் சஞ்சய் பாரு, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பரேக் ஆகியோர் தங்களது புத்தகங்கள் மூலம் பிரதமர் மன்மோகன்சிங்கை போட்டுத் தாக்கியிருந்தனர். இது எதிர்க்கட்சிகளுக்கு அவல் சாப்பிடுவது போலாகிவிட்டது.

இவற்றைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கின் வெளிவரப் போகும் புத்தகமும் மன்மோகன்சிங்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் குடைச்சலை கொடுக்க இருக்கிறது.
நட்வர்சிங் பின்னணி
கடந்த 2001ஆம் ஆண்டு ஈராக்கில் சதாம் உசேன் அதிபராக இருந்தபோது, ஐ.நா.பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துதேவைக்காக, உணவுக்கு எண்ணெய் திட்டத்தை ஐ.நா. சபை அமல்படுத்தியது. இதில் பெரும் ஊழல் நடந்ததாகவும், ஐ.நா.பொதுச் செயலாளராக இருந்த கோபி அன்னானின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க வோல்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தாக்கல்செய்த விசாரணை அறிக்கையில், நட்வர்சிங், அவரது மகன் ஜகத்சிங் ஆகியோரின்பெயர்களும் இடம் பெற்றன. இருவரும் இத்திட்டத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் பலன் அடைந்ததாக வோல்கர்கமிஷன் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இந்த முறைகேடுகளை செய்தபோதுநட்வர்சிங் அமைச்சராக இல்.
அந்தப் பதவியை பயன்படுத்தி சதாம் ஹூசேனின் ஆட்சியில் இருந்த அதிகாரிகளுடன் பேசி இந்தத் திட்டத்தின் காண்ட்ராக்ட்களை தனது மகன் தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார். லோகர் கமிஷன் அறிக்கை வெளியில் வந்தபோது நட்வர் சிங் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இதனால் 2005 ஆம் ஆண்டு நட்வர்சிங் தமது வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.
நேரு, இந்திரா, ராஜிவ் மீது விமர்சனம்
பின்னர் காங்கிரஸ் கட்சியைவிட்டும் அவர் வெளியேறினார். தற்போது தமது சுயசரிதையை அவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகம் தேர்தல் முடிந்த பின்னர் வெளியிடப்பட இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர், சீனா விவகாரங்களை நேரு கையாண்ட முறை தவறு என்றும் நட்வர்சிங் விமர்சித்துள்ளார். அதேபோல் அவசரநிலையை பிரகடனம் செய்ததில் இந்திரா காந்தி தவறு செய்துவிட்டார் என்றும் தமது புத்தகத்தில் நட்வர்சிங் குறிப்பிடுகிறார்.
அதே நேரத்தில், பஞ்சாப் பொற்கோவில் மீதான ராணுவ நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்றுதான் இந்திரா உத்தரவிட்டிருந்தார்..ஆனால் ஆப்பரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் போன அதிகாரிகள் அதை பின்பற்றவில்லை என்றும் அதில் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
சீனா தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி தெளிவான கொள்கைகளைக் கடைபிடித்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் அவருக்குத் தொடர்பில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை அரசியல் ரீதியாக சரியாக ராஜீவ் காந்தி எதிர்கொள்ள தவறிவிட்டார். அதேபோல் இலங்கை தமிழர் பிரச்சனையையும் அவர் சரியாக கையாளவில்லை என்று நட்வர்சிங் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் என்றும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு காரணகர்த்தா எனவும் புகழ்வது ரொம்ப அதிகப்படியானது என்று கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தான போது தாம் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்ததையும் அப்போதைய அமெரிக்க அமைச்சர் காண்டலீசா ரைஸ் தாம் இல்லாவிட்டால் இந்த ஒப்பந்தமே நிறைவேறியிருக்காது என்று கூறியிருப்பதையும் நட்வர்சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications