ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலா.. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பேட்டிக்கு பிறகும் ராஜ்நாத்சிங் மறுப்பு
டெல்லி: ரபேல் போர் விமானம் தொடர்பான முக்கியமான ஒரு தகவலை பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்ததிலிருந்து எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக தங்கள் வார்த்தை ஈட்டிகளை திருப்பி உள்ளன.
59 ஆயிரம் கோடி ரூபாய், மதிப்புள்ள விமான கொள்முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

ஆனால் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் விமான நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு பணிகளை கொடுக்காமல் ரிலையன்ஸ் குழுமத்திற்கு இந்த வாய்ப்பை மத்தியில் தற்போது ஆட்சி செய்யும் மோடி அரசு பெற்றுக்கொடுத்தது என்பது ஹாலண்டே பேட்டியின் மூலம் உறுதியாகி உள்ளது.
ஏனெனில் தங்களுக்கு வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் இந்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ரபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் இருப்பது ஊர்ஜிதமாகி விட்டது என்று காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த ஒரு பங்கும் கிடையாது. ஹாலண்டே அளித்த பேட்டி குறித்து விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசோ, பிரான்ஸ் அரசோ வணிகரீதியான முடிவுகளில் கருத்து கூறவில்லை என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்கம்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று அளித்துள்ள ஒரு பேட்டியில், ரபேல் விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் சர்ச்சைக்கு இடமே கிடையாது. குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications