உள்துறை பொறுப்பை ஏற்கும் முன்பே அதிகாரியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை
டெல்லி: இன்னும் உள்துறை அமைச்சக பொறுப்புகளை ஏற்காத நிலையில் அந்த அமைச்சக செயலாளருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனைகளை நடத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த திங்கள்கிழமை நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவில் அமைச்சராக பதவியேற்றவர் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங். இவருக்கு, உள்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள் நேற்று தங்களது அலுவலகங்களுக்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிலையில், ராஜ்நாத்சிங் இன்னும் அமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை. அதேநேரம் காலத்தை விரையம் செய்யாமல், பாதுகாப்புத்துறை குறித்த ஆய்வு கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளார்.

பாதுகாப்புத்துறை செயலாளர் அனில் கோஸ்சுவாமியை தனது இல்லத்துக்கு அழைத்த ராஜ்நாத்சிங், கடந்த காலங்களில் இந்தியா தவறவிட்ட வாய்ப்புகள், வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், நாடு உடனடியாக சந்திக்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக வரும் ஜூன் 2ம்தேதி ஆந்திர மாநிலத்தின் பிரிப்பு நடைமுறைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.
இதனிடையே, இன்று மாலை அல்லது நாளை முறைப்படி தனது அமைச்சக பொறுப்புகளை ராஜ்நாத்சிங் ஏற்க உள்ளதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications