Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலுக்கு வந்து என்ன செய்தீரு?: பவர்ஸ்டாரை வம்புக்கு இழுக்கும் ராம் கோபால் வர்மா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான ரியல் பவர்ஸ்டார் பவன் கல்யாணை வம்புக்கு இழுத்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு யாரையாவது வம்புக்கு இழுக்காவிட்டால் அன்று இரவு தூக்கம் வராது போன்று. தினமும் யாரையாவது நேரிலோ, ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவோ வம்பிழுத்து வருகிறார். இதனால் பலர் அவரை வம்பு கோபால் வர்மா என்று கூறுகிறார்கள்.

Ram Gopal Varma's comment on Pawan Kalyan

இந்நிலையில் தான் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணை ட்விட்டர் மூலம் வம்பிழுத்துள்ளார். அவர் ட்விட்டரில் தெலுங்கில் கூறியிருப்பதாவது,

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்று கூறி அரசியலுக்கு வந்தவர் ஏன் இதுவரை யாரையும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி கேட்காமல் இருப்பதும் ஏமாற்று வேலை தான் என்று தெரிவித்துள்ளார்.

நான் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அராஜகங்களை கேள்வி கேட்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று ஜனசேனா கட்சியை துவங்கியபோது பவன் கல்யாண் தெரிவித்தார். ஆனால் அரசியலுக்கு வந்து பிறகு அவர் அரசின் தவறான கொள்கைகளையோ, ஊழலையோ, தெலுங்கு தேச கட்சி அல்லது டிஆர்எஸ் பற்றியோ இதுவரை கேள்வி கேட்கவில்லை.

இந்நிலையில் ராம் கோபால் வர்மா கேட்டுள்ள கேள்வி பவன் கல்யாணின் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+