கறுப்பு பணத்தை மீட்கும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுங்கள்: ஜேத்மலானி
தானேயில் நடைபெற்ற 21-வது ராஸ்ட்ரீய கவி மாநாடு தொடக்க விழாவில் கலந்து கொண்டார் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜேத்மலானி. அப்போது அவர் பேசியதாவது :-
நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது. பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏழை மக்களின் உழைப்பை சுரண்டி கறுப்பு பணத்தை உருவாக்குகிறார்கள். அந்த பணத்தை சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்து உள்ளனர். இந்த பணத்தை வெளிகொண்டு வர வேண்டும். இந்த பணியை செய்ய காங்கிரஸ் அரசு தவறி விட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு வரும் கட்சிக்கே நாம் ஓட்டு போட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இந்த ஒரே கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்க வேண்டும். இதற்காக வாய்மொழியில் கூறும் கட்சிகளை கண்டு ஏமாந்து விடக்கூடாது. அந்தகட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்து இருக்க வேண்டும். கறுப்பு பணத்தை மீட்டு வர உறுதிபூண்டு உள்ள கட்சிக்கே ஓட்டு போடுங்கள்' எனத் தெரிவித்தார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி குறித்துக் கூறுகையில், ‘அக்கட்சி மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். ஆனால் அதை நிறைவேற்றுவதில் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் மீது முழு அதிருப்தி அடைந்து உள்ளேன்' என்றார்.