அதிவேக ரயில்களில் விமானத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதா? ராமதாஸ் கண்டனம்
சென்னை: இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் புதிய கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறைப்படி தொடர்வண்டிக் கட்டணம் 50% வரை உயரும். இதனால் தொடர்வண்டித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்தக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் முதல் 10% படுக்கைகளுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் ஒவ்வொரு 10% படுக்கைகளுக்கும் 10 விழுக்காடு வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 20% படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், ஒருவர் முன்பதிவு செய்வாரானால் அவர் 20% கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

50 விழுக்காட்டிற்கு மேல் படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 50% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு இந்த உயர்வு பொருந்தாது. இந்த கட்டண உயர்வு நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.
ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ஆகியவை உயர்வகுப்பினருக்கான தொடர்வண்டிகள் என்று அழைக்கப்பட்ட காலம் மாறி விட்டது. இப்போது நடுத்தர வகுப்பினரும் இத்தகைய தொடர்வண்டிகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் உயர்வு அவர்களை இத்தகைய தொடர்வண்டிகளில் பயணம் செய்ய விடாமல் தடுக்கும். உயர்வகுப்பினர் பயணம் செய்யும் முதல் வகுப்பு மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்தாமல், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணங்களை மட்டும் உயர்த்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இப்புதிய கட்டண முறை நடைமுறைக்கு வந்தால் தொடர்வண்டிக் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னை & மதுரை இடையிலான துராந்தோ தொடர்வண்டியில் குளிரூட்டி வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.1445 ஆகும். 50 விழுக்காடு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.2120 வசூலிக்கப்படும்.
அதேநேரத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் விமானங்களில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.1803 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதேபோல், சென்னை& திருவனந்தபுரம் இடையிலான சதாப்தி தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.3209 வரை வசூலிக்கப்படவுள்ள நிலையில், விமானங்களின் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2724 மட்டும் தான். பயண நேரத்தை பெருமளவு குறைக்கும் விமானங்களை விட தொடர்வண்டிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது எந்த வகையான பொருளாதார உத்தி என்பதை மத்திய அரசும், பிரதமரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும். தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் விமானங்களை நோக்கி திரும்புவதற்கே இது வகை செய்யும்.
அதிவேக தொடர்வண்டிகளில் இப்படி ஒரு கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவை என்ன? என்பது தான் தெரியவில்லை. விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது முதலில் சில வாரங்களுக்கு குறைந்த கட்டணமும், கடைசியாக முன்பதிவு செய்வோருக்கு அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை தொடர்வண்டிகளுக்கு பொருந்தாது. பெரும்பாலான நேரங்களில் தொடர்வண்டி படுக்கைகள் ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. அத்தகைய சூழலில் காலை 10.00 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு கட்டணமும், காலை 10.05 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிப்பது நியாயமான செயலாக இருக்காது.
ஏற்கனவே சிறப்புத் தொடர்வண்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளின் கட்டணமும் உயர்த்தப்படுவது முறையல்ல. தொடர்வண்டிகளை தூய்மையாகவும், சரியான நேரத்திற்கும் இயக்க நடவடிக்கைகள் எடுக்காமல், கட்டணத்தை மட்டும் உயர்த்துவது தொடர்வண்டித்துறை மீது மக்களுக்கு வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். எனவே, ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளில் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications