'பிசிபேலே பாத்தில்' எலி புழுக்கை.. பெண் பத்திரிகையாளரிடம் வாங்கிகட்டிய பெங்களூரின் முன்னணி ஹோட்டல்
பெங்களூர்: முன்னணி உணவகம் ஒன்று வழங்கிய உணவில் எலி புழுக்கை கிடந்துள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ரோட்டிலுள்ள பிரபல பத்திரிகையொன்றில் பணியாற்றுபவர் அனுஷா ரவி. நேற்று மதியம், ஆபீசின் அருகேயுள்ள சர்ச் ஸ்ட்ரீட், வாசுதேவ அடிகாஸ் ஹோட்டலில் பிசிபெலே பாத் ஆர்டர் செய்துள்ளார்.
அலுவலக ஊழியர் பிசிபெலே பாத் வாங்கி வந்துள்ளார். ரூ.40 சாப்பாட்டுக்கும், பார்சலுக்கு ரூ.5ம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பூந்திக்கு நடுவே உவ்வே
ஆனால், பிசிபெலே பாத்துடன் கொடுத்த காராபூந்தி பார்சலை அனுஷா திறந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. பூந்தியோடு சேர்த்து, எலி புழுக்கைகளும் அதில் கிடந்தன. உடனே, பார்சலோடு, ஹோட்டலுக்கே சென்றார் அனுஷா ரவி.

நோ ரீபண்ட்
எலி புழுக்கை கிடந்த சாப்பாட்டை திரும்ப பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ஹோட்டல் நிர்வாகமோ, வேறு சாப்பாட்டை எக்சேஞ்ச் செய்யலாமே தவிர காசு தரமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

பூந்தி போச்சே
உங்கள் ஹோட்டலில் இனியும் நான் சாப்பிட தயாராக இல்லை என்று கூறிய அனுஷா, அத்தோடு நிற்காமல், ஹோட்டலில் இருந்த பூந்தி அத்தனையையும், கீழே கொட்டச்சொல்லி, போராடி வெற்றியும் பெற்றுள்ளார்.

மாநகராட்சியில் புகார்
அதேநேரம், உணவை திரும்பவும் தன்னோடு எடுத்துவரவில்லை. ஒருவேளை தேவைப்பட்டால் ஆய்வுக்கூடத்தில் அதை சோதனைக்கு உட்படுத்த வாய்ப்பு இருந்தது. இருப்பினும், மாநகராட்சி ஹெல்ஸ் இன்ஸ்பெக்டரிடம் அனுஷா ரவி புகார் அளித்துள்ளார்.

பதில்
இதனிடையே வாசுதேவ அடிகாஸ் எம்.டியான, ஜேக்கப் குரியன், இ-மெயில் மூலம், அனுஷாவை தொடர்புகொண்டு, உணவகத்தில் முழு சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

முன்னணி ஹோட்டல்
பெங்களூரிலுள்ள உயர்தர சைவ ஹோட்டல்களில் ஒன்றாக கருதப்படுவது வாசுதேவ அடிகாஸ். நகரின் பல பகுதிகளில் ஏகப்பட்ட கிளைகளோடு ஹோட்டல்கள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications