இளஞ்சிவப்பு, பச்சை கலர் கலவையில் மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு!
22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி : புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 1994ம் ஆண்டில் இருந்து பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டைவிட நாணயங்களை தயார் செய்யவே செலவு குறைவாக இருப்பதால் ஒரு ரூபாய் தாள்கள் அச்சடிப்பது நிறுத்தப்படுவதாக காரணங்கள் சொல்லப்பட்டன.
இந்நிலையில், புதிய வடிவில் ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது.

கையொப்பம்
ஒரு ரூபாய் நோட்டு குறித்த சிறப்பம்சங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி புதிய ஒரு ரூபாய் நோட்டில் நிதி அமைச்சக செயலாளரின் கையெழுத்து இரு மொழிகளில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில்
மேலும், இந்த புதிய நோட்டில் மஹாராஷ்டிராவில் உள்ள சாம்ராட் சாகர் என்று சொல்லப்படும்எண்ணெய் ஆய்வு மையத்தின் படமும், அசோகா தூணும் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களுடன் கூடிய வண்ணமயமான தாளில் புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறப்புகள்
இந்திய அரசு என்று இந்தியிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருப்பதோடு, புதிய ரூபாய் நாணய சின்னமும் இதில் அச்சிடப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. மேலும் 1 என்ற எண் கண்களுக்கு தெரியாத வகையில் அச்சிடப்படும் என்றும் தெரிகிறது.

நோட்டுகள் ரெடி
புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன. விரைவில் இது புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மறுவரவு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. இதையடுத்து புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications