புகைபிடிக்கும் தோற்றத்தில் காளி.. லீனா மணிமேகலை மீது ம.பி.யிலும் புகார்
போபால்: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கியுள்ள "காளி" என்ற ஆவண படத்தின் போஸ்டருக்காக அவர் மீது மத்திய பிரதேசத்திலும் வழக்குப்பதிவு செய்ய சொல்லி புகாரளித்து இருப்பதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் சமூக அவலங்கள் குறித்த கருத்துக்களை பதவி செய்து வருவபர்.
ஈழப்போராட்டம், சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண் உரிமைகள் தொடர்பாக இவர் எழுதிய கவிதை மிகவும் பிரபலமானவை.
கறி சாப்பிட்டு மதுவை ஏற்கும் தெய்வம் தான் காளி.. லீனாவிற்கு திரிணாமுல் எம்பி மொய்த்ரா சப்போர்ட்
லீனா மணிமேகலையின் படங்கள்
கவிதைகள் மட்டுமின்றி ஆவணப் படங்கள் திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். தேவதைகள், பறை, பலிபீடம் உள்ளிட்ட ஆவணப் படங்களையும், செங்கடல், மாடத்தி ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கி இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புக வரும் ஈழ அகதிகளின் வலியை உணர்த்தும் வகையில் செங்கடல் படத்தை எடுத்த லீனா மணிமேகலை, மாடத்தி படத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு இழைக்கப்படும் சாதிய ஒடுக்குமுறைகளை பேசியது.
மாடத்தி திரைப்படம்
அவரது மாடத்தி திரைப்படம் 15 க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இதன் டிரைலரை நந்திதா தாஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்டார். கேரள அமைச்சர் சைலஜா டீச்சரும் அந்த டிரைலரை பகிர்ந்து பாராட்டி இருந்தார். ஓடிடியில் வெளியான மாடத்தி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
காளி திரைப்படம்
இந்த நிலையில் அவர், காளி என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. "காளி" என்ற தலைப்புடன் அதற்கு பின்னால் பெண் கடவுள் கையில் திரிசூலத்தையும் மறு கையில் சிகரெட் பிடித்திருக்கிறது. அத்துடன் LGBT சமூகத்தின் வானவில் கொடியும் அதில் காட்டப்பட்டு இருக்கிறது.
ட்விட்டரில் கடும் எதிர்ப்பு
இந்த போஸ்டர் வெளியானதிலிருந்தே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வலதுசாரிகள், பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்து மதத்தை அவமதித்த லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்ட் செய்தனர்.
வழக்குப்பதிவு
சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் தொடர்பாக லீனா மணிமேகலை மீது உத்தரப்பிரதேச போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். டெல்லி காவல்துறையும் வழக்கு பதிந்துள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, போஸ்டரை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.