விசாரணைக் கைதிகளை விடுவிக்கும் விவகாரம்: நீதித்துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், அதிகபட்ச தண்டனையில் பாதி அளவை அனுபவித்த விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய, அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த அதிரடி உத்தரவின் எதிரொலியாக, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Release under trials who have spent half their term: Supreme Court

அதேவேளையில், மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகள் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பல ஆண்டுகளாக உள்ள வெளிநாட்டுக் கைதிகள் சார்பில் தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சம்:

ஒருவர் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், பல ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும் சூழலில், ஒருவேளை அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்தால் விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையில் பாதி அளவை ஏற்கெனவே அனுபவித்திருந்தால், அந்த விசாரணைக் கைதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்குள், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சட்ட அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விடுவிக்க தகுதியான விசாரணைக் கைதிகளை அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.

குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டத்தை, தங்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் தேக்கநிலை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 4 லட்சம் விசாரணைக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைப்பட்டிருக்கின்றனர். இவர்களில், 2.5 லட்சம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் சிறையில் உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+