சோனியாவை விமர்சித்த விவகாரம்... மோடியிடம் கதறி அழுகையா? மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் மறுப்பு!!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்தது தொடர்பாக பிரதமர் மோடி கண்டித்ததாகவும் அப்போது கண்ணீர் விட்டு அழுததாகவும் வெளியான தகவல்களை மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் மறுத்துள்ளார்.
மத்திய சிறு, குறு தொழில்துறை இணை அமைச்சரான கிரிராஜ்சிங், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது ‘முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, நைஜீரிய கருப்பினப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக காங்கிரசார் ஏற்றுக்கொண்டிருப்பார்களா? சோனியா காந்தி, வெள்ளை நிறத்தவர் என்பதால்தான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டனர்' என்று அவர் கூறியிருந்தார்.

கடும் கண்டனம்
கிரிராஜ்சிங்கின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கான நைஜீரிய நாட்டு தூதரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் அமளி
இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பதில் அளிக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

வருத்தம் தெரிவித்த கிரிராஜ்
அப்போது எழுந்த கிரிராஜ்சிங், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். யாரையும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை, எனது கருத்தால் யாராவது காயப்பட்டிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவர்கூறினார்.

கண்ணீர் விட்டு அழுகை?
இதனிடையே சோனியா குறித்து கருத்து தெரிவித்த கிரிராஜ்சிங்கிடம் பிரதமர் மோடி விளக்கம் கேட்டதாகவும் அப்போது கிரிராஜ்சிங் கண்ணீர் விட்டு கதறி அழுதார் எனவும் செய்திகள் வெளியாகின.

கிரிராஜ்சிங் மறுப்பு
ஆனால் இதனை கிரிராஜ் சிங் மறுத்து உள்ளார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், நான் பிரதமர் மோடியை சந்திக்கவே இல்லை. நான் அழுதேன் என்று யார் கூறினார்? யார் பார்த்தார்? என்றார் கிரிராஜ்சிங்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications