சோனியாவை விமர்சித்த விவகாரம்... மோடியிடம் கதறி அழுகையா? மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் மறுப்பு!!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்தது தொடர்பாக பிரதமர் மோடி கண்டித்ததாகவும் அப்போது கண்ணீர் விட்டு அழுததாகவும் வெளியான தகவல்களை மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் மறுத்துள்ளார்.
மத்திய சிறு, குறு தொழில்துறை இணை அமைச்சரான கிரிராஜ்சிங், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது ‘முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, நைஜீரிய கருப்பினப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக காங்கிரசார் ஏற்றுக்கொண்டிருப்பார்களா? சோனியா காந்தி, வெள்ளை நிறத்தவர் என்பதால்தான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டனர்' என்று அவர் கூறியிருந்தார்.

கடும் கண்டனம்
கிரிராஜ்சிங்கின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கான நைஜீரிய நாட்டு தூதரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் அமளி
இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பதில் அளிக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

வருத்தம் தெரிவித்த கிரிராஜ்
அப்போது எழுந்த கிரிராஜ்சிங், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். யாரையும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை, எனது கருத்தால் யாராவது காயப்பட்டிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவர்கூறினார்.

கண்ணீர் விட்டு அழுகை?
இதனிடையே சோனியா குறித்து கருத்து தெரிவித்த கிரிராஜ்சிங்கிடம் பிரதமர் மோடி விளக்கம் கேட்டதாகவும் அப்போது கிரிராஜ்சிங் கண்ணீர் விட்டு கதறி அழுதார் எனவும் செய்திகள் வெளியாகின.

கிரிராஜ்சிங் மறுப்பு
ஆனால் இதனை கிரிராஜ் சிங் மறுத்து உள்ளார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், நான் பிரதமர் மோடியை சந்திக்கவே இல்லை. நான் அழுதேன் என்று யார் கூறினார்? யார் பார்த்தார்? என்றார் கிரிராஜ்சிங்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications