குட் நியூஸ் மக்களே.. ரெப்போ விகிதம் மீண்டும் அதிரடி குறைப்பு.. வட்டி சுமை குறையும்!
டெல்லி: ரெப்போ (repo) விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம்தான் ரெப்போ (repo) விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. தற்போது மீண்டும் இதன் விகிதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக குறைந்தது.
தற்போது மீண்டும் இதில் 25 அடிப்படை புள்ளிகள் ஆர்பிஐ மூலம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது வட்டி விகிதம் 6% ஆக குறைந்துள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு கடன் உள்ளிட்ட சில லோன்களுக்கு 0.25% வட்டி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ விகிதத்தை குறைக்கும்போது வணிக வங்கிகளுக்கு நிதிப்புழக்கம் அதிகம் ஆகும். வங்கிகள் நிறைய பணம் புழக்கம் இருப்பதால் மக்களுக்கு வட்டி சுமை குறையும். ஆனால் இந்த பணப்புழக்கம் காரணமாக கடுமையான பண வீக்கம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் பொருட்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த பண வீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அதோடு இந்த அதிரடி மாற்றம் காரணமாக இந்தியாவின் ஜிடிபி 7.4%மாக இந்த வருடம் அதிகரிக்கும் என்றும் ஆர்பிஐ கணித்து இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications