சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்டம்தான்.. பாஜகவுக்கு இடி.. ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
ராய்ப்பூர்: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சத்தீஷ்கர் மாநிலத்தில் பாஜகவுக்கு இந்த தேர்தலிலும் ஏமாற்றமே மிஞ்சும் என ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு முடிவு கூறியுள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 74 சதவிகிதத்திற்கு மேலாக வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. சத்தீஷ்கரை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார்.

சத்தீஷ்கரில் கடந்த 2018 ஆம் ஆண்டுவரை பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனால், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக பல்வேறு வியூகத்துடன் தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைப்பத்தில் மும்முரம் காட்டியது. இதனால், சத்தீஷ்கரில் ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பாஜக 14 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் இதர இடங்களில் வென்றன. இந்த முறை ஆட்சியை பிடிப்பதற்காக இரு கட்சிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தேசிய அளவிலான தலைவர்களும் சத்தீஷ்கரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான், மிசோரம், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதன்படி, சத்தீஷ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே அமையும் எனவும் பாஜக தோல்வியடையும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 44-52 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பாஜக 34-42 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சத்தீஷ்கரில் மொத்த தொகுதிகள்: 90
பெரும்பாண்மைக்கு - 46
காங்கிரஸ்: 44-52
பாஜக: 34 -42
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications