அரசுப் பணிகளில் மாற்று திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் அவர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் தங்களுடைய அனைத்து துறைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுகீட்டை வழங்க வேண்டும். இதை மூன்று மாதங்களுக்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications