விரைவில் வருகிறது 2000 ரூபாய் நோட்டு.. அச்சடிக்கும் பணி தீவிரம்
டெல்லி: விரைவில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருப்பதாக நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அச்சடிக்கப்படும் அதிகபட்ச ரூபாய் நோட்டுக்களாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே இதுவரை இருந்து வருகின்றது. தற்போது புழக்கத்தில் அதிகபட்ச மதிப்பாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இந்நிலையில், தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி 2,000 ரூபாய் நோட்டுக்கள் மைசூரு கரன்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நோட்டுக்களை விரைவில் புழக்கத்துக்கு விட ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புழக்கத்தில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.