சக்திமான் குதிரைக்கு இரங்கல் தெரிவித்த கோஹ்லி.. கடுப்பில் பாஜக

Subscribe to Oneindia Tamil

மும்பை: உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ தாக்குதலால் உயிரிழந்த போலீஸ் குதிரை சக்திமான் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று, கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

Rest In Peace, you innocent soul Shaktiman. We, humans, failed you, Virat Kihli tweeted

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காவல் துறையைச் சேர்ந்த சக்திமான் குதிரையை பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி தாக்கி காலை உடைத்ததாகப் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜோஷி பின்னர் ஜாமீனில் விடுதலையானார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்பட்டது. இத்தாக்குதலில் குதிரை சக்திமானின் இடது பின்னங்கால் உடைக்கப்பட்டது.

குதிரை எழுந்து நிற்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குதிரையின் கால் அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் குதிரைக்கான செயற்கை காலை தானமாக வழங்கினார். இந்நிலையில், நேற்று குதிரை சக்திமான் இறந்ததாக அதை பராமரித்து வந்த போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விராட் கோஹ்லி இன்று தனது டிவிட் ஒன்றில், "அப்பாவி சக்திமான் உனது ஆத்மா சாந்தியடையட்டும். மனிதர்களாகிய நாங்கள் உனக்கு தவறிழைத்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

இது உத்தராகண்ட் மாநில பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+