Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 ஸ்டார் ஹோட்டலில் வைத்து தவறாக நடந்தார் நீதிபதி ஏ.கே.கங்குலி- சட்ட மாணவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி என்று அவர் மீது பாலியல் புகார் சாட்டியுள்ள சட்ட மாணவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக கங்குலி இருந்தபோது அவரிடம் பயிற்சிக்காக வந்தவர் இந்த மாணவி. அப்போது தன்னிடம் நீதிபதி கங்குலி தவறாக நடந்து கொண்டதாக தனது பிளாக்கில் எழுதியிருந்தார் இந்த மாணவி.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த குழு, நீதிபதி கங்குலியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது. மாணவியும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது...

அடிக்கடி ஹோட்டலுக்கு வரச் சொன்னார்

அடிக்கடி ஹோட்டலுக்கு வரச் சொன்னார்

நீதிபதி ஏ.கே.கங்குலி என்னை டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அடிக்கடி வருமாறு நிர்ப்பந்தித்தார். தனக்கு உதவியாக இருக்குமாறு அவர் கேட்டார். அப்போது அவர் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியின்போது நடந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக இருந்து வந்தார்.

ஒயின் கொடுத்தார்

ஒயின் கொடுத்தார்

ஒருமுறை நான் அவரது அறைக்குப் போனபோது, அங்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன அதிகாரிகள் இருந்தனர். நான் வந்ததும் அவர்கள் கிளம்பிச் சென்றனர். பின்னர் என்னை அமருமாறு கூறிய நீதிபதி கங்குலி என்னிடம் ஒயினை கொடுத்தார். அது டிசம்பர் மாதம். என்னிடம் ஒயினைக் கொடுத்த அவர் கிறிஸ்துமஸ் காலத்தில் ஒயின் குடிப்பது சம்பிரதாயம் என்று அவராகவே விளக்கம் கொடுத்தார்.

நடத்தை சரியில்லை

நடத்தை சரியில்லை

அவரது பேச்சும், நடத்தையும் எனக்குப் பிடிக்கவில்லை. அதை அவரிடம் மறைமுகமாகவும், நேரடியாகவும் குறிப்பிட்டேன். இருப்பினும் அவர் அத்தோடு நிற்கவில்லை. என்னிடம் தவறாகவும் நடக்க முயன்றார். இதையடுத்து நான் அறையை விட்டு வேகமாக வெளியேறி விட்டேன்.

லாபி வரை வந்து மன்னிப்பு கேட்டார்

லாபி வரை வந்து மன்னிப்பு கேட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் என் பின்னாலேயே வந்தார். லாபி வரை வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டபடியே உடன் வந்தார்.

ஆதாரம் இருக்கிறது

ஆதாரம் இருக்கிறது

நீதிபதி மீது நான் கூறும் புகாருக்கு ஆதாரம் உள்ளது. ஆதாரத்துடன்தான் நான் புகார் கூறுகிறேன் என்று அந்த மாணவி கூறியுள்ளார்.

விரிவான விசாரணை

விரிவான விசாரணை

இந்த விசாரணையை நீதிபதிகள் லோதா, தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+