59 போலி நிறுவனங்கள்... ரூ.6,172 கோடி மோசடி.. ரிக்ஷா ஓட்டியவர் ஒரே நாளில் கம்பெனி முதலாளி
டெல்லி: டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கில் குடிசைப்பகுதியில் வசிக்கும் 59 பேரின் பெயரில் கம்பெனி தொடங்கி ரூ.6,172 கோடி வரை அந்நியச்செலவாணி மோசடியில் ஈடுபட்ட பேங்க் ஆப் பரோடா அதிகாரிகளை சிபிஐ கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
சாந்தினி சவுக் பகுதியில் சில தொழிலதிபர்கள், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர்கள், ரிக்சா ஒட்டுனர்கள், பேப்பர் போடுபவர்கள் என 59 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பெயரில் போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குடிசைப் பகுதிகளில் வாழும் அவர்களிடம் மாதம் ரூ.15,000 வரை சம்பளம் தருவதாகக் கூறி மூளை சலவைச் செய்து அவர்களிடமிருந்து அடையாளச் சான்றிதழ்களை வாங்கி அதன் மூலம் போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர். இந்த ஆவணங்களை வைத்து அவர்களது பெயரில் 59 போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் பெயரில் பேங்க் ஆப் பரோடாவில் நிரந்தர வைப்புக் கணக்கு தொடங்கியுள்ளனர்.
அந்த கம்பெனிகளின் பெயரில் துபாய், மற்றும் ஹாங் காங் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், மேலும் அங்கிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான வணிகத்தின் போது பொருட்களின் விலையை மூன்றிலிருந்து நன்கு மடங்கு உயர்த்தி கோடிக்கணக்கான ரூபாய் அந்நியசெலவாணியில் ஈடுபட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பண பரிவர்த்தனைக்கு பல்வேறு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டு அந்த கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டு இறுதியாக அது பரோடா வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடப்படுகிறது.
இவ்வாறாக, தொழிலதிபர்களான குருசரண் சிங், சாந்தன் பாட்டியா, சஞ்சய் அகர்வால் உள்ளிட்டோர் பரோடா வங்கி அதிகாரிகளான எஸ்.கே.கார்க், மற்றும் ஜெநிஷ் துபே ஆகியோரின் உதவியுடன் கடந்த 2014- ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.6,172 கோடி அந்நியச்செலவாணி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்ப்பிரிவு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications