ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது கேலிக்கூத்து- ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கருத்து

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது கேலிக்கூத்து என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக வங்கிகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

KC Chakrabarty

இதை ஈடுகட்டும் வகையில் எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தாலும், மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுக்கிறபோது அதற்கு கட்டணம் நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்திய வங்கிகள் சங்கம் கோரி உள்ளது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி.சக்கரவர்த்தி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பணம் எடுப்பதற்கு, அதுவும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது மிகவும் கேலிக்கூத்தானது. இது ஒரு போதும் எங்கும் நடக்காது என்றார்.

மேலும் பணம் எடுப்பதால் அதிக செலவாகிறது என வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூல் செய்தால், நீங்கள் வங்கிக்கு போனால் கூட உங்களிடம் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+