நெற்றி குங்குமத்தை விட விரலில் இடும் மைக்கே முக்கியத்துவம்... வாக்களித்த மணப்பெண், மணமக்கள்
கர்நாடக தேர்தலில் குங்குமத்தை விட விரலில் இடும் மைக்கே முக்கியத்துவம் என்று கருதிய மணப்பெண்ணும், மணமக்களும் வாக்களித்து சென்றனர்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் குங்குமத்தை விட விரலில் இடும் மைக்கே முக்கியத்துவம் என்று கருதிய மணப்பெண்ணும் மணமக்களும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
கர்நாடகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காவிரி விவகாரம், லிங்காயத்துகள் என பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் மடிகேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்னதாக வாக்குச் சாவடிக்கு மணப்பெண் அலங்காரத்தில் வந்து அவர் வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்றார்.
#WATCH Groom Mallikarjun Gamangatti and bride Nikhita Jodi arrived at polling booth 191-A in Dharwad to cast their vote #KarnatakaElection2018 pic.twitter.com/AeTyf1mgcH
— ANI (@ANI) May 12, 2018
அதுபோல் தர்வாத் பகுதியைச் சேர்ந்த மணமகன் மல்லிகார்ஜுன கமான்கட்டி மற்றும் மணமகள் நிகிதா ஜோதி ஆகியோர் தர்வாத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
Right before her wedding, a bride casts her vote at polling booth number. 131 in Madikeri. #KarnatakaElections2018 pic.twitter.com/UsoxftlFDS
— ANI (@ANI) May 12, 2018