உ.பி.: அனுமதி இன்றி மகா பஞ்சாயத்து- பாஜக எம்.பி. சத்யபால் சிங், எம்.எல்.ஏ. கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அனுமதியின்றி மகாபஞ்சாயத்து நடத்த சென்ற பாஜக எம்.பி. சத்யபால் சிங், எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மகாபஞ்சாயத்து நடத்த முசாபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மற்றும் கட்சியினர் இன்று லக்னோவில் இருந்து கிளம்பினர்.
அனுமதி இன்றி மகாபஞ்சாயத்து நடத்த சென்ற சோம் உள்ளிட்ட பாஜகவினர் மொராதாபாத் அருகே கைது செய்யப்பட்டனர். மேலும் மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்ள சென்ற பாஜக எம்.பி.க்கள் சத்யபால் சிங் மற்றும் நேபாள் சிங் ஆகியோரும் வழியிலேயே கைது செய்யப்பட்டனர்.
சங்கீத் சோம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு வீடியோ தான் முசாபர்நகரில் கலவரம் வெடிக்க காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் பாஜக இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி கலந்து கொண்ட ஒரு பேரணியில் பாஜக சோமை கௌரவப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications