அனைத்து நதிநீர் பிரச்சினைக்கும் ஒரே தீர்ப்பாயம்! மத்திய அரசு முடிவால் காவிரி வாரியத்திற்கு சிக்கல்?
டெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்க்க ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு மாநிலங்கள் நடுவே நதிநீர் பிரச்சனைகள் தொடருவதால், அவற்றுக்கு தீர்வு காண மத்திய நீர்வளத்துறை இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நதிநீர் தீர்ப்பாயத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுவார். தேவைப்பட்டால் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சை அவர் உருவாக்கிக் கொள்ளலாம். எந்த ஒரு நதிநீர் சிக்கல் தொடர்பான வழக்குகளையும் விசாரித்து இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு தருவதாக இந்த தீர்ப்பாயம் அமையும்.
இதற்காக, மாநிலங்கள் நடுவேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு திட்டம் இருப்பதை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் சசி சேகரும் உறுதி செய்துள்ளார்.
தீர்ப்பாயத்துடன் சேர்த்து, டி.ஆர்.சி என்ற கமிட்டி உருவாக்கப்படும். இதில் நீர்வள துறை நிபுணர்கள் இடம் பெற்றிருப்பார்கள். தீர்ப்பாயத்துக்கு வழக்கு வரும் முன்பாக இந்த கமிட்டி விசாரணையை நடத்துமாம்.
மத்திய அரசின் இந்த முடிவால் காவிரி மேலாண் வாரியம் அமைவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி தொடர்பான வழக்கு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் புது முடிவால், காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என நீதிமன்றம் கருத வாய்ப்புள்ளது.
நாட்டில், நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க தீர்ப்பாயம் உதவும் என்றாலும், இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் முயற்சியில் முக்கால் கிணறை தாண்டியுள்ள தமிழகத்திற்கு இது பின்னடைவாக அமையுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications