Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸை கழற்றிவிடும் ஆர்ஜேடி..தேஜஸ்வி யாதவ் பரபர அறிவிப்பு! உற்று பார்க்கும் தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் இன்னுமே தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையே உடன்பாடு ஏற்படவில்லை. தொகுதி உடன்படிக்கை பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போகும் சூழலில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.. அதாவது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் என அவர் அறிவித்துள்ளார்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு- பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. ஜேடியு- பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

RJD to Contest All 243 Bihar Seats says Tejashwi Yadav Amid Mahagathbandhan Seat-Sharing Deadlock

தேஜஸ்வி யாதவ்

இதற்கிடையே முசாபர்பூரில் உள்ள காந்தி என்ற பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மகாபந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத நிலையில், பீகாரில் உள்ள எல்லா 243 தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் என அவர் அறிவித்திருக்கிறார்.

எல்லா தொகுதிகளிலும் போட்டி

அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்த தேஜஸ்வி யாதவ், தனது தந்தையும் ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் சாதனைகளையும் பட்டியலிட்டார். அவர் மேலும், "நாங்கள் மீண்டும் வருவோம். இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள், பீகாரில் உள்ள அனைத்து 243 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் அறிவித்தார். முசாபர்பூர், போச்சாஹன், கைக்கட், காந்தி போன்ற தொகுதிகளைக் குறிப்பிட்ட அவர், தொண்டர்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தேஜஸ்வியின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெறுமன தொண்டர்களை உற்சாகப்படுத்தும் பேச்சு மட்டுமில்லை.. தேஜஸ்வி குறிப்பிட்ட முசாபர்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இருக்கிறார்கள். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகச் சிக்கல்கள் இருக்கும் சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தேஜஸ்வி இதுபோல பேசியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

பின்னணி

சமீபத்தில் மகாபந்தனின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சமீபத்தில் கேட்டபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியான பதிலைத் தவிர்த்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் தேஜஸ்வியின் இந்த பேச்சை நாம் பார்க்கலாம்.. கூட்டணியின் தலைமைப் பதவிக்குத் தான் சரியான தலைவன் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலும் தேஜஸ்வி பேசியிருக்கிறார்.

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விஐபி, ஜே.எம்.எம் மற்றும் எல்.ஜே.பி (பராஸ் பிரிவு) என மகாபந்தன் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் உள்ளன. அவை தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போதிலும், இதுவரை பேச்சுவார்த்தை இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கேட்பதே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவ காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கூட்டணியில் சிக்கல்?

இந்த சூழலில் தேஜஸ்வி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் எனச் சொல்லியிருப்பது கவனம் பெறுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து கொள்ளலாம் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால், இன்னொரு தரப்பினர் இது தேர்தலில் அதிக இடங்களைப் பெற பேரம் பேசும் உத்தியாகவும், ஆர்.ஜே.டி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+