கெஜ்ரிவால் ஆட்சியில் திருடர்கள் அட்டகாசம்.... ஏடிஎம் எந்திரத்தையே தூக்கிச் சென்று அக்கிரமம்!
டெல்லி: வடக்கு டெல்லியில் உள்ள பொதுத் துறை வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த எந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
வடக்கு டெல்லியில் உள்ள வாசிராபாத் பகுதியில் மாநில அரசு நடத்தும் கார்பரேஷன் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் புதன்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்தெடுத்து சென்றுவிட்டனர்.

கொள்ளை போன ஏடிஎம் எந்திரத்தில் ரூ. 17 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஏடிஎம் மையங்களில் பணம் திருடு போய் கொண்டிருந்தது. இந்நிலையில் கொள்ளையர்கள் துணிச்சலாக ஏடிஎம் எந்திரத்தையே திருடிச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டெல்லியில் கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை திருட முயன்று அதை பெயர்த்தெடுக்க முடியாததால் விட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications